நேர நிர்வாகத்தை எளிய தமிழில் சொல்லித் தருகிற இந்நூல், தமிழில் ஒரு புதுவிதமான எழுத்துமுறையை அறிமுகப்படுத்துகிறது. சுயமுன்னேற்றக் கட்டுரைகள் அடங்கியது என்றாலும் ஒரு புனைகதை நூலுக்குரிய விறுவிறுப்பும் வேகமும் கொண்ட மொழியில் எழுதப்பட்டது. ஆசிரியர் சோம. வள்ளியப்பன், தமிழகத்தின் முக்கியமானதொரு மேனேஜ்மெண்ட் குரு.