இன்று வரை செக்ஸ் விஷயத்தில் ஆண்கள் சுயநலம் கொண்டவர்களாகவே இருக்கிறார்கள். தனக்கு மட்டும் ‘இன்பம்’ கிடைத்தால்போதும் என்று நினைக்கின்றனர். அதனால், அவர்களுடைய இணையான பெண்கள், உச்சகட்டம் என்ற முழு இன்பத்தை அடைய முடியாமல் தவிக்கிறார்கள். அதனால், வாழ்க்கையில் எத்தனையோ பிரச்னைகள், சண்டைகள், சச்சரவுகள், விவாகரத்துகள் எல்லாம்.
அந்த வகையில்,
உச்சகட்டம் என்றால் என்ன? உச்சகட்டத்தின் அவசியம் – தேவை என்ன? உச்சகட்டத்தை அடைவது எப்படி? உச்சகட்டத்தை அடைய முடியாமல் போவது ஏன்? என்பது உள்ளிட்ட அனைத்து ஆண்களும் – பெண்களும் தெரிந்துகொள்ளவேண்டிய பல முக்கியமான கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது இந்தப் புத்தகம். ஒவ்வொரு வீட்டின் படுக்கை அறையிலும் இருக்க வேண்டிய மிக முக்கியமான புத்தகங்களுள் இதுவும் ஒன்று.