பத்தொன்பதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் ஸ்காட்லாந்துக்காரரான ராபர்ட் லூயிஸ் ஸ்டீவன்சன். கடற்பயணங்கள் மீது ஸ்டீவன்சனுக்கு விருப்பம் அதிகம். அந்த அனுபங்களை வைத்தே நிறைய கதைகளை எழுதியிருக்கிறார்.
‘கடத்தப்பட்டவன்’ கதையும் சாகசங்கள் நிறைந்த கடற்பயணம்தான்! ஆதரவற்ற நாயகன் தன் சொந்தம், சொத்துகளைத் தேடிச் செல்கிறான். நடுவில் கப்பல் மாலுமியால் கடத்தப்படுகிறான். கப்பலில் அவனுக்கு நேரும் மோசமான அனுபவங்கள், எதிர்பாராமல் கிடைத்த நட்பு, ஒரு கொலை, தலைமறைவு… என்று நாவல் முழுவதும் ஒரே விறுவிறுப்பு!
புத்தகத்தை எடுத்தால், முடிக்காமல் வைக்க முடியாது!