இந்நிய சுதந்தரப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்ற தலைர்களில் மக்களை மிகவும் கவர்ந்தவர் சுபாஷ் சந்திர போஸ்.
ஒட்டுமொத்த தேசமும் காந்தியின் தலைமையில் அமைதி வழியில் போராடிக் கொண்டிருந்தபோது, ஆயுதப் போராட்டம் தான் விடுதலைக்கு ஒரே தீர்வு என்று இந்தியாவைவிட்டு ரகசியமாக வெளியேறியவர் போஸ். அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் தனி ஆயுதப்படையையும் தனி அரசாங்கத்தையுஙம் அவரால் உருவாக்க முடிந்தது.
நோக்கத்தில் தெளிவும் தீர்க்கமும் தேசப்பற்றும் வீரமும் இருந்தால், ஒரு தனிமனிதன் எத்தனை உயரலாம் என்பதற்கு நேதாஜியின் வாழ்க்கை ஒரு சிறந்த உதாரணம்.