ரயில் புன்னகை, குதிரை, அரை வைத்தியன், முழு வைத்தியன், சேவகி, பேட்டி, ஜானகி சாகவில்லை !, பாரிஸ் தமிழ்ப் பெண் என்று 8 சிறுகதைகள் இந்தத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. நகைச்சுவை, சோகம், த்ரில்லர் என்று கலவையான கதைகள். ஒவ்வொரு கதையும் சுஜாதாவுக்கே உரிய அற்புதமான கதை சொல்லும் உத்தியால் படிப்பவர்களைப் பரவசப்படுத்திவிடுகிறது. இந்தக் கதைகள் 1982 முதல் 1984 வரை பல்வேறு பிரபல பத்திரிகைகளில் வெளி வந்து, பரவலான பாராட்டுகளைப் பெற்றவை.