தமது எழுச்சியூட்டும் கவிதைகள் மூலம் இந்திய விடுதலைப் போரட்டத்தில் தமிழகத்தின் பங்பளிப்பை அதிகப்படுத்தியவர் மகாகவி பாரதி.
குயில்பாட்டு, பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள் எதை எடுத்தாலும் மகாகவியின் விசுவரூபத்தைத் தரிசிக்க முடியும்.
உணவுக்கே போராடும் எளிய வாழ்க்கைதான். ஆனால் ஏழைமை அவரது உணர்ச்சித் தீவிரத்தைக் கட்டுப்படுத்தவில்லை. துப்பாக்கிகளும் தோட்டாக்களும் அளிக்காத அச்சத்தை ஆங்கிலேயர்களுக்கு அவரது கவிதைகளும் கட்டுரைகளும் அளித்தன.
உலக அளவில் வைத்துப் பேசப்படக்கூடிய படைப்புகளைத் தமிழுக்கு அளித்த நமது மகா வாழ்க்கையல்ல; தேசப்பற்றும் மொழிப்பற்றும் மேலோங்கித் ததும்பும் உன்னதமபான வாழ்க்கை.