பெண்ணியக் கருத்துகள் இலக்கியத்தில் இடம்பெற்ற சரித்திரத்தை அறியும் முன் தமிழ்ப் பண்பாடு பெண்களை எவ்வாறு நோக்கியுள்ளது என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.
பண்பாட்டிலிருந்து உருவாகும் பேச்சுமொழியிலும் இலக்கியத்திலும் பெண்கள் எவ்வாறு நோக்கப்படுகிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ளும்போது எந்தப் பண்பாட்டு வெளியிலிருந்துகொண்டு பெண்கள் இயங்கியிருக்கிறார்கள் என்பது புரியும்.
அம்பை
அம்பை (சி.எஸ். லக்ஷ்மி) வரலாற்றாசிரியர். புது தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளாகத் தமிழில் கதைகளும் கட்டுரைகளும் எழுதிவருகிறார். நாற்பது ஆண்டுகளாகப் பெண்கள் வரலாறு, வாழ்க்கை பற்றிய ஆய்வில் ஈடுபட்டிருக்கிறார்.
SPARROW (Sound & Picture
Archives for Research on Women) என்ற பெண்கள் ஆவணக் காப்பகத்தை நிறுவி, தற்போது அதன் இயக்குநராகச் செயல்பட்டு வருகிறார்.