கலர்க் கனவுகள், கலகலப்பு, துடி துடிப்பு. கூடவே, எதிர்காலம் குறித்த கவலை, இனம்புரியாத பயம், குழப்பம், சந்தேகங்கள். எல்லாம் சேர்ந்த கலவைதான் டீன் ஏஜ் பருவம். கடவுளும் சாத்தானும் மாறி மாறி அலைக்கழிக்கும் காலகட்டம் இது.
வாழ்க்கையை எப்படி, எப்போது திட்டமிடுவது? காதலிப்பது குற்றமா? இல்லை எனில், எப்போது காதலிக்கலாம்? யாரை? வாழ்வின் முக்கிய முடிவுகளை எப்போது எடுப்பது? அவை முக்கிய முடிவுகள் என்று எப்படித் தெரிந்துகொள்வது? பிரச்னைகளை, தடைகளை எப்படிக் கையாள்வது, எதிர்கொள்வது, வெற்றி பெறுவது?
இப்படிச் செய், அப்படிச் செய்யாதே என்று அட்வைஸ் மழையை அள்ளி வீசும் புத்தகம் அல்ல இது. சிநேகத்துடன் டீன் ஏஜ் பையன்களின் தோளில் கைபோட்டுப்பேசும் முயற்சி.