”
உலகின் இரண்டாவது பெரிய மதமும் அதி வேகமாகப் பரவிக்–கொண்டிருக்கும் முக்கியச் சமயமுமான இஸ்லாத்தின் கடைசி இறைத் தூதர், முகமது நபி.
அமைதியின் பேருருவமும் கருணையின் வடிவமுமான நபிகளின் ஆச்சரியமூட்டும் வாழ்வையும் பிரமிக்கவைக்கும் பங்களிப்பையும் இந்தப் புத்தகம் கண்முன் கொண்டு வருகிறது.
நபிகளின் வாழ்வினூடாக இஸ்லாத்தின் தோற்றம், வளர்ச்சி, உயர்ந்த நோக்கங்கள் என்று அனைத்தையும் சுவாரஸ்யமாக அறிமுகப்படுத்துகிறார் தாழை மதியவன்.
ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தும் இன்னமும் உலகம் முழுவதிலும் உள்ளவர்களால் இஸ்லாமும் அதன் கொள்-கை—களும் ஆராதிக்கப்படுவது ஏன் என்பதற்கான விடை இதில் தெளிவாக உள்ளது.
உயிர்கள் அனைத்தின்மீதுமான அன்பும் நேசமும் சகோ-தரத்–துவமும்-தான் இஸ்லாத்தின் அடிநாதம் என்பதை நபிகளின் வாழ்வும் வாக்கும் தெள்ளத்தெளிவாக உணர்த்துகின்றன. “