“நெடுஞ்சாலை கார் ஓட்டுநர்களின் வாழ்க்கையை நம்மால் கற்பனைகூடச் செய்துபார்க்க
முடியாது.
சீறிப்பாயும் வேகத்தில் பறந்தாகவேண்டும். அப்படிப் பறக்கும்போது
முன்னால் தெரியும் காட்சிகளையும் பின்னால் தொடர்ந்துவரும் அசைவுகளையும்
எப்போதும் கவனத்தில் கொண்டிருக்கவேண்டும். பயணத்தின்போது மட்டுமல்ல,
வாழ்க்கையிலும்தான்.
டிரைவர்களின் பிரத்தியேகமாக உலகத்தை நம் கண்முன்
கொண்டுவந்து நிறுத்துகின்றன இந்தக் கதைகள். அவர்களுடைய வேட்கை, வேகம்,
நம்பிக்கை, அவநம்பிக்கை, அன்பு, துயரம் அனைத்தும் இங்கே சீறிப்பாய்கின்றன.”